நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மலையாள திரையுலகில் இயக்குனராக நுழைந்து கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பஷில் ஜோசப். அதேசமயம் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து சமீபவருடங்களாக கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக வளர்ந்து விட்டார் பஷில் ஜோசப். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி, கிஷ்கிந்தா காண்டம், இந்த வருடம் வெளியான பொன் மான் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இவர் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படம் சவுதி அரேபியா குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.. காரணம் இந்த படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கான சென்சாருக்கு அனுப்பப்பட்ட போது திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் படத்தை திரையிடலாம் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் ஒரு முக்கிய அம்சமாக அந்த திருநங்கை கதாபாத்திரம் இடம் பெற்றிருப்பதால் அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் தயக்கம் காட்டியுள்ளனர். அதனால் இன்று அரபு நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவப்பிரசாத் இயக்கியுள்ளார்.