கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
மலையாள திரையுலகில் இயக்குனராக நுழைந்து கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பஷில் ஜோசப். அதேசமயம் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து சமீபவருடங்களாக கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக வளர்ந்து விட்டார் பஷில் ஜோசப். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி, கிஷ்கிந்தா காண்டம், இந்த வருடம் வெளியான பொன் மான் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இவர் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படம் சவுதி அரேபியா குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.. காரணம் இந்த படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கான சென்சாருக்கு அனுப்பப்பட்ட போது திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் படத்தை திரையிடலாம் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் ஒரு முக்கிய அம்சமாக அந்த திருநங்கை கதாபாத்திரம் இடம் பெற்றிருப்பதால் அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் தயக்கம் காட்டியுள்ளனர். அதனால் இன்று அரபு நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவப்பிரசாத் இயக்கியுள்ளார்.